search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி தீர்ப்பு"

    டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு விசாரணையின் போது, டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் எம்.பி. லோகூர், தீபக்குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியது. அதில் தலைநகர் டெல்லியில் மலைபோல குப்பை மேடுகள் உள்ளது. அதை அகற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது? டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது.

    ஆனால் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இதில் கோர்ட்டு தலையீடும் போது எங்கள் நடவடிக்கைகளுக்காக நாங்கள் விமர்சனத்துக்கு ஆளாகி தாக்கப்படுகிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.



    அத்துடன் திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும் அதற்கு பதில் அளிக்காத 10 மாநிலங்களுக்கு நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.

    திடக்கழிவு மேலாண்மை கொள்கைகள் கேள்விக்குறியாகி இருப்பதால் டெல்லியிலும் மும்பையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.#SC
    தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்று நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி மாநில அரசில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

    அதில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது.

    புதுவையிலும் கவர்னருக்கு அதிகாரமா? தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு அதிகாரமா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் டெல்லி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தீர்ப்பில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பது புதுவைக்கு பொருந்தும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    இந்த தீர்ப்பை மீறி கவர்னர் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி கூறும் போது, டெல்லி மாநில சம்பந்தமாக அளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது, இதை சுப்ரீம் கோர்ட்டே சுட்டிக்காட்டி இருக்கிறது என்று கூறினார்.


    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் -அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அது புதுவைக்கு பொருந்தும். மேலும் அரசியல் சாசன பெஞ்ச் அளிக்கும் தீர்ப்பு எல்லா மாநிலத்துக்கும் பொதுவானது என்று கூறினார்.

    இதனால் இந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? இல்லையா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் கிரண்பேடி இது சம்பந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது,

    எனக்கு (கவர்னர்) அதிகாரம் இல்லை என சொல்பவர்கள் சுப்ரீம் கோட்டு தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். அதில் கவர்னருக்குள்ள அதிகாரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். #Kiranbedi
    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதற்கு நாளை தனது கருத்தை தெரிவிப்பதாக கவர்னர் கிரண்பேடி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்துக்கு ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளப்படாமல் குப்பை மேடாக இருப்பதை கண்ட கவர்னர் கிரண்பேடி அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களிடம் அலுவலகத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்த துப்புரவு பணிகளை ஆய்வு செய்ய வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்று காலை கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் ஊசுட்டேரியை ஆய்வு செய்ய சென்றார். அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் மரக்கன்று நட்டார்.

    பின்னர் அங்கிருந்து வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகம் முழுவதையும் சென்று ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையாக உள்ளதை கண்டு துப்புரவு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் நான் முக்கியத்துவம் கொடுப்பது தூய்மை பணிக்கும், நீராதாரத்தை பாதுகாக்கவும் மட்டுமே.

    புதுவை தற்போது தூய்மையாக உள்ளதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. அனைவரின் ஒத்துழைப்பு முக்கியமாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கவர்னர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும் என்று அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி மீண்டும் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தின் காரைக்கால், மாகி, ஏனாம் உட்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத சென்ற 304 மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மொத்தமாக ரூ. 5 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை கல்வித்துறைக்கு அனுப்பப்படுகின்றது.

    நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். புதுவை வந்த துணை ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனியாக பேசும் போது புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து,15-வது நிதிக்கமி‌ஷனில் புதுவையை இணைத்து சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

    புதுவை மாநில மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். புதுவை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும். கவர்னருக்கு கோப்புகளில் சந்தேகம் ஏற்பட்டால் அமைச்சர், அதிகாரிகளுடன் பேசி ஒப்புதல் அளிக்க வேண்டும்.


    கவர்னருக்கு விளக்கம் கேட்க அதிகாரம் உண்டு. கோப்புகளை திருப்பி அனுப்பவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் இல்லை.

    கவர்னர் தனது கருத்தை அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் திணிக்க கூடாது. கவர்னரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்தும் வருகின்றேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்.

    மத்திய சட்டத்துறை மத்திய மாநில தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த கூட்டத்தை இன்றும் நாளையும் டெல்லியில் நடத்துகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்றதல்ல.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy #Kiranbedi
    உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி காரணமாக இன்று ஊசுடு ஏரிக்கு ஆய்வு சென்ற கவர்னர் கிரண்பேடியுடன் அதிகாரிகள் செல்லாமல் புறக்கணித்தனர்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு தனி அதிகாரம் இல்லை என ஆம் ஆத்மி கட்சி தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் அமைப்பு பெஞ்ச் வழங்கிய இந்த தீர்ப்பு நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    அதோடு இனி புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகளை பார்வைக்காக மட்டுமே அனுப்புவோம். மேலும், கவர்னருக்கு புதுவை மாநிலத்தின் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உரிமை உண்டு. ஆனால், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு கவர்னர் தரப்பில் யூனியன் பிரதேசமான புதுவையும், டெல்லியும் ஒன்றல்ல என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் இருவேறு பிரிவுகளின் கீழ் 2 யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஏற்கனவே புதுவையில் நிலவி வந்த கவர்னர், முதல்- அமைச்சர் இடையிலான மோதல் முற்றி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கவர்னர் கிரண்பேடி மதிப்பளிக்கவில்லை என்றால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வார இறுதி நாளான இன்று கவர்னர் கிரண்பேடி ஊசுடு ஏரிக்கு ஆய்வுக்கு சென்றார். கவர்னருடன் வழக்கமாக அரசு துறையின் முக்கிய அதிகாரிகள் உடன் செல்வது உண்டு.

    ஆனால், இன்றைய தினம் ஏரிக்கு சைக்கிளில் சென்ற கவர்னருடன் பெரும்பாலான அதிகாரிகள் உடன் செல்லவில்லை. வனத்துறை அதிகாரி குமார் மற்றும் வழக்கமாக செல்லும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எதிரொலி காரணமாகவே அதிகாரிகள் கவர்னருடன் செல்லாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    ஊசுடு ஏரியை சுற்றிப் பார்த்த கவர்னர் கிரண்பேடி அங்கு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மீண்டும் சைக்கிளிலேயே ராஜ்நிவாஸ் திரும்பினார். #Kiranbedi
    கவர்னருக்கு உள்ள அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று வெளியிட்ட தீர்ப்பை ஏற்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி உள்ளார். #DelhiPowerTussle
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, அது இந்திய அரசியல் அமைப்பு அமர்வு 5 நீதிபதிகள் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, முழு தீர்ப்பை நான் படிக்கவில்லை.

    முக்கிய அம்சங்களை நான் கூற விரும்புகிறேன், புதுவைக்கு 100-க்கு 110 சதவீதம் இந்த தீர்ப்பு பொருந்தும். கவர்னர் அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என தொடர்ந்து 2 ஆண்டுகளாக அறிவுறுத்தி உள்ளேன். 19 முறை கடிதம் எழுதியுள்ளேன், அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போட அதிகாரம் இல்லை என கூறியுள்ளேன்.

    பல பகுதிகளுக்கு சென்று பார்க்க உரிமை உண்டு. ஆனால், தனியாக உத்தரவு போட அதிகாரம் இல்லை என பல பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பக் கூடாது.

    முக்கிய கொள்கை முடிவுகளை மட்டுமே அனுப்ப வேண்டும். நான் கூறிய அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. துணை நிலை ஆளுனர் மக்கள் நல திட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும்போது தடையாக இருக்க கூடாது.

    கவர்னர் முட்டுக்கட்டை போட அதிகாரம் இல்லை என நான் கூறியது தீர்ப்பிலேயே வந்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவில் கை வைக்க அதிகாரம் இல்லை என நான் கூறியதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    கேபினட் முடிவு அனுப்பினால் அதில் கை வைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. டெல்லியில் நிலம் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம், நிதி ஆகியவற்றில் உரிமை இல்லை. ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதால், அனைத்து அதிகாரமும் சட்டசபைக்கு உண்டு.

    கோப்புகள் அனுப்பும் போது காரணங்கள் கூறி கோப்புகளை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியிருப்பது கவர்னருக்கு எந்த முடிவெடுக்கவும் தனி அதிகாரம் இல்லை.

    முழு அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே உண்டு. இது சம்பந்தமாக நான் தொடர்ந்து 2 ஆண்டுகளாக கவர்னர், பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதியும் எனக்கு சரியான பதில் கூறவில்லை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. மக்களுக்கு எங்களது அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள்.


    நாங்கள் நிறைவேற்றும் போது கோப்புகளை காலம் கடத்தி நிறைவேற்ற முடியாமல் தேவையில்லா காரணங்களை சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்ள அதிகாரங்களை நியமிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தீர்ப்பு புதுவை மாநிலத்திற்கு பொருந்தும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர் அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு அதிகாரம் கிடையாது. தேவைப்பட்டால் கோப்பில் விளக்கம் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரை அழைத்து பேசலாம். அவரும்கூட சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து பேச வேண்டும் என தெரிவித்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

    அதிகாரிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த உத்தரவை நான் போட்டிருக்கிறேன். யார் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறினாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு போட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தொடருவேன்.

    2 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள மரியாதையை குறைக்கும் வகையில் அதிகாரிகளை அழைத்து பேசி தன்னிச்சையாக செயல்பட வைத்ததை இனி நிறுத்தி கொள்வார்கள் என நினைக்கிறேன். கவர்னரை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மக்களாட்சி தத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமைச்சரவைக்கு உள்ள உரிமையில் அவர் தலையிட்டதால் தான் பிரச்சினை வந்தது. அதிகார போட்டி இதில் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DelhiPowerTussle #PuducherryCM #Narayanasamy
    மாநில அரசு உரிமைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
    சென்னை:

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே கவர்னர் நடக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள கவர்னர்களும், குறிப்பாக தமிழக கவர்னர் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
    ×